புதன், 4 மார்ச், 2015

இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி

இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி  
1. ஆடியாடி    அகம்   கரைந்து    இசை
பாடிப்    பாடி    கண்ணீர்மல்கி    எங்கும்   
நாடிநாடி    நரசிங்கா    என்று
வாடிவாடும்    இவ்வாணுதலே

 
2. வாணுதல்    இம்மடவரல்    உம்மைக்
காணும்    ஆசையுள்    நைகின்றால்    விறல்
வாணன்    ஆயிரம்    தோள்துணித்தீர்    உம்மைக்
காண    நீர்    இரக்கம்  இலீரே


3. இரக்க    மனத்தோடு    எரியனை
அரக்கும்    மெழுகும்    ஒக்கும்    இவள்
இரக்கமெழீஇர்    இதற்கென்    செய்கேன்
அரக்கன்    இலங்கை    செற்றீருக்கே


4. இலங்கை    செற்றவனே    என்னும்    பின்னும்
வலங்கொள்    புள்ளுயர்த்தாய்    என்னும்
உள்ளம்    மலங்க    வெவ்வுயிர்க்கும்    கண்ணீர்மிகக்  
கலங்கிக்  கைதொழும்    நின்று இவளே


5. இவள்    இராப்பகல்    வாய்வெறீஇ    தன
குவளையொண்    கண்ணநீர்    கொண்டாள்    வண்டு
திவளும்    தண்ணத்துழாய்    கொடீர்    என
தவள    வண்ணர்    தகவுகளே


6. தகவுடையவனே    என்னும்    பின்னும்  
மிகவிரும்பும்    பிரான்    என்னும்    எனது
அகவுயிர்க்கு    அமுதே    என்னும்    உள்ளம்
உகவுருகி    நின்று    உள்ளுளே


7. உள்ளுளாவி    உலர்ந்துலர்ந்து    என
வள்ளலே    கண்ணனே    என்னும்    பின்னும்
வெள்ளநீர்க்    கிடந்தாய்    என்னும்    என
கள்விதான்    பட்ட    வஞ்சனையே


8. வஞ்சனே    என்னும்    கைதொழும்    தனது
நெஞ்சம்    வேவ    நெடிதுயிர்க்கும்    விறல்
கஞ்சனை    வஞ்சனை    செய்தீர்    உம்மைத்
தஞ்சம்    என்று    இவள்    பட்டனவே


9. பட்டபோது    எழுபோது    அறியாள்    விறல்
மட்டலர்    தண்துழாய்    என்னும்    சுடர்
வட்டவாய்    நுதிநேமியீர்    உமது  
இட்டமென்கொள்    இவ்வேழைக்கே


10. ஏழைபேதை    இராப்பகல்    தன
கேழிலொன்    கண்ணநீர்    கொண்டாள்    கிளர்
வாழ்வைவேவ    இலங்கை    செற்றீர்    இவள்
மாழைநோக்கு    ஒன்றும்    வாட்டேன்மினே


11. வாட்டமில்    புகழ்    வாமனனை    இசை
கூட்டிவண்    சடகோபன்சொல்    அமை
பாட்டோர்    ஆயிரத்துள்    இப்பத்தால்    அடி
சூட்டலாகும்    அந்    தாமமே

 
       ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக