இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி
1.அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாமவாழ் முடிசங்கு ஆழிநூல் ஆரமுள
செந்தாமரைகண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை அடிக்கள் செம்பொன் திரு உடம்பு
அந்தாமவாழ் முடிசங்கு ஆழிநூல் ஆரமுள
செந்தாமரைகண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை அடிக்கள் செம்பொன் திரு உடம்பு
2.திருவுடம்பு வான்சுடர் செந்தாமரைக் கண் கைகமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை திருமார்க்கு அரனேயோ
ஒருவிமுமின்றி என்னுள் கலந்தானுக்கே
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை திருமார்க்கு அரனேயோ
ஒருவிமுமின்றி என்னுள் கலந்தானுக்கே
3.என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மண்ணும் சுடர்மலைக்கு கண்பாதம் கை கமலம்
மன்னுமுழுவேழ் உலகமும் வயிற்றுனுள
தன்னுள் கலவாதது எப்பொருளும் தானிலையே
மண்ணும் சுடர்மலைக்கு கண்பாதம் கை கமலம்
மன்னுமுழுவேழ் உலகமும் வயிற்றுனுள
தன்னுள் கலவாதது எப்பொருளும் தானிலையே
4.எப்பொருளும் தானாய் மரகதக் குன்றமொக்கும்
அப்பொழுதைத் தாமரைப்பூக் கண்பாதம் கைகமலம்
எப்பொழுதும் நாள்திங்கள் ஆண்டு ஊழிஊழிதொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே
அப்பொழுதைத் தாமரைப்பூக் கண்பாதம் கைகமலம்
எப்பொழுதும் நாள்திங்கள் ஆண்டு ஊழிஊழிதொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே
5.ஆராவமுதமாய் அல்லாவியுள் கலந்த
காரார்கரு முகில்போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண்பாதம் கைகமலம்
பேரார நீள்முடி நாண் பின்னும் இழைபலவே
காரார்கரு முகில்போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண்பாதம் கைகமலம்
பேரார நீள்முடி நாண் பின்னும் இழைபலவே
6.பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே
பலபல கட்டுண்டு கேட்டுற்று மோந்தின்பம்
பலபலவே சோதி வடிவு பண்பு என்னில்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்க்கேயோ
பலபல கட்டுண்டு கேட்டுற்று மோந்தின்பம்
பலபலவே சோதி வடிவு பண்பு என்னில்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்க்கேயோ
7.பாம்பணைமேல் பார்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணைதோள் பின்னைக்கா ஏறுடன் ஏழ்செற்றதுவும்
பூம்பணைய சோலைமராமரம் ஏழெய்ததுவும்
பூம்பினைய தண்துழாய் பொன்முடியெம் போரேறே
காம்பணைதோள் பின்னைக்கா ஏறுடன் ஏழ்செற்றதுவும்
பூம்பணைய சோலைமராமரம் ஏழெய்ததுவும்
பூம்பினைய தண்துழாய் பொன்முடியெம் போரேறே
8.பொன்முடியம் போரேற்றை எம்மானை நாள்தடந்தோள்
தன்னிகரொன்றில்லாத தண்துழாய் மாலையனை
என்முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல்முடிவு காணேன்நான் சொல்லுவது என்சொல்லீரே
தன்னிகரொன்றில்லாத தண்துழாய் மாலையனை
என்முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல்முடிவு காணேன்நான் சொல்லுவது என்சொல்லீரே
9.சொல்லீர் என்னம்மானை என்னாவி ஆவிதனை
எல்லையில் சீர் என்கருமாணிக்கச் சுடரை
நல்லவமுதம் பெறர்கரிய வீடுமாம்
அல்லிமலர் விரையொத்து ஆணல்லன் பெண்ணல்லனே
எல்லையில் சீர் என்கருமாணிக்கச் சுடரை
நல்லவமுதம் பெறர்கரிய வீடுமாம்
அல்லிமலர் விரையொத்து ஆணல்லன் பெண்ணல்லனே
10.ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்கால் பேணுமுருவாகும் அல்லனுமாம்
கோணைப் பெரிதுடைத்து எம்பெம்மானைக் கூறுதலே
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்கால் பேணுமுருவாகும் அல்லனுமாம்
கோணைப் பெரிதுடைத்து எம்பெம்மானைக் கூறுதலே
11.கூறுதல் ஒன்றாராக் குடக்கூத்த அம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறினவந்தாதி ஒராயிரத்துள் இப்பத்தும் வல்லார்
கூறுவர் உள்ளார் உளரேல் கூடுவர் வைகுந்தமே
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறினவந்தாதி ஒராயிரத்துள் இப்பத்தும் வல்லார்
கூறுவர் உள்ளார் உளரேல் கூடுவர் வைகுந்தமே
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக