புதன், 4 மார்ச், 2015

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் அருளிச் செய்த  
திருப்பல்லாண்டு

தனியன்கள்
நாதமுனிகள் அருளிச்செய்தது
गुरुमुखमनतीत्य: प्राह वेदानशेषान् नरपति परिक्लुप्तम् शुल्कमातातुकाम: ।
श्वशुरममरवन्द्यं रङ्गनाथस्य साक्षात् द्विजकुलतिलकं तं विष्णुचित्तम् नमामि ॥

பாண்டிய பட்டர் அருளிச்செய்தவை  
மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூர் என்றொருக்கால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம் கீழ்மையினிற்சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து

பாண்டியன் கொண்டாடப் பட்டற்பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்கமெடுத்தூத - வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று


1. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
                பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
               உன் சேவடி செவ்வித் திருக்காப்பு

2. அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

3. வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர்வாழ்
இலங்கை பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

4. ஏடுநிலத்திடுவதன் முன்னம் எங்கள்குழாம் புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ
நாடுநகரமும் நன்கறிய நமோ நாராயணாவென்று
பாடுமனமுடைப் பத்தருள்ளீர் வந்து பல்ல்லாண்டு கூறுமினே
 

5. அண்டக்குலத்துக் கதிபதியாகி அசுரர் இராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துத் தவிர்ந்த இருடீகேசன் தனக்குத் தொண்டக்குலத்திலுள்ளீர் வந்தடி தொழுது ஆயிரநாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே

6. எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழியாட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதில் அரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே

7. தீயிற்பொலிகின்ற  செஞ்சுடராழி திகழ் திருச் சக்கரத்தின்
கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடியாட்செய்கின்றோம்
மாயப் பொருபடைவாணனை  ஆயிரம் தோளும் பொழிகுருதி
பாய சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

8. நெய்யிடை நல்ல சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல
பையுடைநாகப் பகைக்கொடியானுக்குப் பல்லாண்டு பல்லாண்டு கூறுவனே

9. உடுத்துக் களைந்த பீதகவாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக்கருமம் திருத்தித் திருவோணத்திருவிழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு  கூறுதுமே

10. எந்நாள் எம்பெருமான் உந்தனக்கு அடியோமென்றெழுத்துப் பட்ட
அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுய்ந்தது காண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள் சிலைகுனித்து
ஐந்தலைய பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

11. அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே நானுமுனக்குப் பழவடியேன்
நல்வகையால் நமோ நாராயணாயவென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே

12. பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும் வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பியசொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே



ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக