புதன், 4 மார்ச், 2015

இரண்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி

இரண்டாம்  பத்து இரண்டாம்  திருவாய்மொழி
 
1.  திண்ணன்    வீடு    முதல்    முழுதுமாய்
எண்ணின்    மீதியன்    எம்பெருமான்
மண்ணும்    விண்ணு    மெல்லாம்    உடனுண்டநம்   
கண்ணன்    கண்ணல்லது    இல்லையோர்    கண்ணே


2.ஏபாவம்    பரமே    ஏழ்    உலகும்
ஈபாவம்    செய்து    அருளால்    அளிப்பாரார்
மாபாவம்
    விட    அரற்க்குப்    பிச்சைபெய்
கோபால
    கோளரி    ஏறன்    அன்றியே

3. ஏறனைப்    பூவனைப்    பூமகள்    தன்னை   
வேறின்றி    விண்தொழத்    தன்னுள்    வைத்து
மேல்தன்னை    மீதிட    நிமிர்ந்து    மண்கொண்ட
மால்தனில்    மிக்குமோர்    தேவும்    உளதே


4. தேவும்    எப்பொருளும்    படைக்கப்  
பூவில்    நான்முகனைப்    படைத்த  
தேவன்    எம்பெருமானுக்கல்லால்  
பூவும்    பூசனையும்    தகுமே


5. தகும்சீர்    தந்தனி    முதனினுள்ளே
மிகும்    தேவும்    எப்பொருளும்    படைக்கத்
தகும்கோலத்    தாமரைக்    கண்ணன்    எம்மான்
மிகும்சோதி    மேலறிவார்    எவரே


6.  எவரும்    யாவரும்    எல்லாப்    பொருளும்
கவர்வின்றித்    தன்னும்    ஒடுங்க    நின்ற
பவர்கொள்    ஞான    வெள்ளச்    சுடர்மூர்த்தி
அவரெம்மாழி    யம்    பள்ளியாரே


7. 
பள்ளியாலிலை    ஏழுலகும்    கொள்ளும்
வள்ளல்    வல்வயிற்றுப்    பெருமான்
உள்ளுளார்    அறிவார்    அவன்    தன்      
கள்ளமாய    மனக்    கருத்தே


8.  கருத்தில்    தேவும்    எல்லாப்    பொருளும்
வருத்தித்த    மாயப்    பிரானையன்றி
ஆரே    தித்திலை    மூவுலகும்    தம்மில்
இருத்திக்    காக்கும்    இயல்வினாரே


9.  காக்கும்    இயல்வினன்    கண்ணபெருமான்
சேர்க்கை    செய்து    தன்னுந்தியுள்ளே
வாய்த்த    திசைமுகன்    இந்திரன்    வானவர்  
ஆக்கினான்    தெய்வ    உலகுகளே


10.  கள்வா    எம்மையும்    ஏழுலகும்    நின்
உள்ளே    தோற்றிய        இறைவா    என்று
வெள்ளேறன்    நான்முகன்    இந்திரன்    வானவர்
புள்ளூர்தி    கழல்    பணிந்து    ஏத்துவரே

 
11.  ஏத்த    ஏழுலகும்    கொண்ட    கோலக்
கூத்தனை    குருகூர்ச்    சடகோபன்  
வாய்த்த    ஆயிரத்துள்    இவை    பத்துடன்  
ஏத்த    வல்லவர்க்கு    இல்லையோர்    ஊனமே


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !

1 கருத்து: