இரண்டாம் பத்து எட்டாம் திருவாய்மொழி
1. அணைவது அரவணைமேல் பூம்பாவையாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடுமுதலாம்
புணைவன் பிறவிப் பெருங்கடல் நீந்துவார்க்கே
2. நீந்தும் துயர்ப்பிறவி உட்பட மற்றெவ்வவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண்புனல் பொய்கை யானைஇடர் கடிந்தவன்
பூந்தண்துழாய் என்தனி நாயகன் புணர்ப்பே
3. புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்த்ததன் உந்தியோடு ஆகத்துமன்னி
புணர்த்த திருவாகித் தன்மார்பில் தான்சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே
4. புலனைந்து மேயும் பொறியைந்தும் நீங்கி
நலமந்தம் இல்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே
5. ஒவாத்துயர்ப் பிறவி உட்பட மற்றெவ்வவையும்
மூவாத் தனிமுதலா ய் மூவுலகும் காவலோன்
மாவாகி ஆமையா ய் மீனாகி மானிடமாம்
தேவாதிதேவ பெருமான் என் தீர்த்தனே
6. தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூந்தாமம்
சேர்த்தியவையே சிவன் முடிமேல் தான்கண்டு
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே
7. கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்ப் புக்கு
இடந்திடும் தன்னும் கரக்கும் உமிழும்
தடம்பெருந்தோள் ஆரத்தழுவும் பாரென்னும்
மடந்தையை மால்செய்கின்ற மால் ஆர்காண்பாரே
8. காண்பாரார் எம்மீசன் கண்ணனை என்காணுமாறு
ஊண்பேசில் எல்லா உலகும்ஓர் துற்றாற்றா
சேண்பால வீடோவுயிரோ மற்றெப் பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளனாம் எங்குமே
9. எங்குமுளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லையால் என்று இரணியன் தூண்புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத்தோன்றிய என்
சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே
10. சீர்மைகொள் வீடு சுவர்க்கம் நரகீறா
ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்
வேர்முதலாய் வித்தாய் பரந்து தனிநின்ற
கார்முகில் போல்வண்ணன் என்கண்ணனை நான்கண்டேனே
11. கண்டலங்கள் செய்ய கருமேனி அம்மானை
வண்டலம்பும் சோலை வழுதிவள நாடன்
பண்தலையில் சொன்னதமிழ் ஆயிரத்து ளிப்ப்பத்தும் வல்லார்
விண்தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம்மாவீடே
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக