இரண்டாம் பத்து முதல் திருவாய்மொழி
1.வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மேபோல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே
2.கோட்பட்ட சிந்தையாய் கூர்வாய அன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராயிரங்குதியால்
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தந்துழாய் தாமம் காமுற்றாயே
3.காமுற்ற கையறவோடு எல்லேயிராப்பகல்
நீமுற்றக் கண்துயிலாய் நெஞ்சுருகி ஏங்குதியாய்
தீமுற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள்நயந்த
யாமுற்றது உற்றாயோ வாழி கனைகடலே
4.கடலும் மலையும் விசும்பும் துழாயெம்போல்
சுடர்கொள் இராப்பகல் துஞ்சாமல் தண்வடாய்
அடல்கொள் படையாழி அம்மானைக் காண்பான்நீ
உடலம் நோயுற்றாயோ ஊழிதோறூழியே
5.ஊழிதோறூழி உலகுக்கு நீர்கொண்டு
தோழியரும் யாமும்போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன்கண் பாசத்தால் நைவாயே
6.நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயின்னாள்
மைவான் இருளகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐவாய் அரவணைமேல் ஆழிப்பெருமானார்
மெய்வாசகம் கேட்டு என்மெய் நீர்மை தோற்றாயே
7.தோற்றோம் மடநெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீநடுவே
வேற்றோர் வகையில் கொடிதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியோ வாழி கனையிருளே
8.இருளின் திணிவண்ணம் மாநீர்க் கழியேபோய்
மருளுற்றிராப்பகல் துஞ்சாயால் தண்வாடாய்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெருநசையால் ஆழாந்து நொந்தாயே
9.நொந்தாராக் காதல்நோய் மெல்லாவி உள்ளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைக் கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண்துழாய் ஆசையால் வேவாயே
10. வேவாரா வேட்கைநோய் மெல்லாவி உள்ளுலர்த்த
ஓவாதிராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
மாவாய் பிளந்து மருதிடைபோய் மண்ணளந்த
மூவாமுதல்வா இனியெம்மைச் சோரேலே
11.சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராதகாதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவைபத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணெனவே
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக