இரண்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி
1. எம்மாவீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மாபாத பற்புத் தலைசேர்த்தொல்லை
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே
2. ஈதேயான் உன்னைக் கொள்வதெஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணிவண்ண எந்தாய்
எய்தா நின்கழல் யானெய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யேலே
3. செய்யேல் தீவினை என்றருள் செய்யும்என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின்கழல்
எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே
4. எனக்கே ஆட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே
5. சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக அய்தற்க யானும்
பிறப்பில் பல்பிறவிப் பெருமானை
மறப்பொன் றின்றி என்றும் மகிழ்வேனே
6. மகிழ்கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ்கொள் சோதி மலர்ந்த அம்மானே
மகிழ்கொள் சிந்தை சொல் செய்கைகொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே
7. வாராய் நின்திருப்பாத மலர்க்கீழ்ப்
பேராதே யான் வந்து அடையும்படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பிலென்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே
8. எக்காலத்தெந்தையாய் என்னுள் மன்னில்
மற்றெக் காலத்திலும் யானொன்றும் வேண்டேன்
மிக்கார்வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே
9. யானே என்னை அறிய கிலாதே
யானே எந்தனதே என்றிருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் வானவர் ஏறே
10. ஏறேல் வென்று ஏர்கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன்பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே
11. விடலில் சக்கரத்து அண்ணலை மேவல்
விடலில் வண்குருகூர்ச் சடகோபன்
கெடலில் ஆயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக