புதன், 4 மார்ச், 2015

கண்ணிநுண் சிறுத்தாம்பு

மதுரகவியாழ்வார் அருளிச் செய்த 
கண்ணிநுண் சிறுத்தாம்பு

தனியன்கள்

நாதமுனிகள் அருளிச் செய்தவை
अविदित विषयान्तर: शठारेरुपनिषदा मुपगानमात्र भोग: ।
अपिचगुणवशात्तदेक शेषी मधुरकविर्हृदये ममाविरस्तु ॥

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் -ஏறு
எங்கள் வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே அரண்

1.கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன்  என்னப்பனில்
நண்ணித்தென் குருகூர் நம்பி என்னக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என்நாவுக்கே

2. நாவினால் நவிற்று இனபமெய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடிமெய்ம்மையே
தேவு மற்றறியேன் குருகூர்நம்பி
பாவின் இன்னிசை பாடித்திரிவனே

3. திரிதந்தாகிலும் தேவபிரானுடை
கரியகோலத்  திருவுருக் காண்பன்நான்
பெரிய வண்குருகூர் நகர்நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே

4. நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவார் ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே

5. நம்பினேன் பிரர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்
செம்பொன்மாடத் திருக்குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே

6. இன்றுதொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்றுதன் புகழ் ஏத்தவருளினான்
குன்றமாடத் திருக்குருகூர் நம்பி
என்றுமென்னை இகழ்விலன் காண்மினே

7. கண்டுகொண்டென்னைக் காரிமாறப் பிரான்
பண்டைவல்வினை மாற்றி அருளினான்
எண்திசையும் அறிய வியம்புகேன்
ஒண்தமிழ்ச் சடகோபன் அருளையே

8. அருள்கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள்கொண்டாயிரம் இந்தமிழ் பாடினான்
அருள்கொண்டீர் இவ்வுலகினில் மிக்கதே

9. மிக்கவேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என்னெஞ்சுள் நிறுத்தினான்
தக்கசீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆள்
புக்ககாதல் அடிமைப் பயனன்றே

10. பயனன்றாகிலும் பாங்கல்ல ராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்
குயில் நின்றார் பொழில்சூழ் குருகூர்நம்பி
முயல்கின்றேன் உந்தன் மொய்கழற்கன்பையே

11.அன்பந்தன்னை அடைந்தவர்கெல்லாம்
அன்பன் தென்குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவிகள் சொன்னசொல்
நம்புவார் பதி வைகுந்தங் காண்மினே
 


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் அருளிச் செய்த  
திருப்பல்லாண்டு

தனியன்கள்
நாதமுனிகள் அருளிச்செய்தது
गुरुमुखमनतीत्य: प्राह वेदानशेषान् नरपति परिक्लुप्तम् शुल्कमातातुकाम: ।
श्वशुरममरवन्द्यं रङ्गनाथस्य साक्षात् द्विजकुलतिलकं तं विष्णुचित्तम् नमामि ॥

பாண்டிய பட்டர் அருளிச்செய்தவை  
மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூர் என்றொருக்கால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம் கீழ்மையினிற்சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து

பாண்டியன் கொண்டாடப் பட்டற்பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்கமெடுத்தூத - வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று


1. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
                பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
               உன் சேவடி செவ்வித் திருக்காப்பு

2. அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

3. வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர்வாழ்
இலங்கை பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

4. ஏடுநிலத்திடுவதன் முன்னம் எங்கள்குழாம் புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ
நாடுநகரமும் நன்கறிய நமோ நாராயணாவென்று
பாடுமனமுடைப் பத்தருள்ளீர் வந்து பல்ல்லாண்டு கூறுமினே
 

5. அண்டக்குலத்துக் கதிபதியாகி அசுரர் இராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துத் தவிர்ந்த இருடீகேசன் தனக்குத் தொண்டக்குலத்திலுள்ளீர் வந்தடி தொழுது ஆயிரநாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே

6. எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழியாட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதில் அரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே

7. தீயிற்பொலிகின்ற  செஞ்சுடராழி திகழ் திருச் சக்கரத்தின்
கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடியாட்செய்கின்றோம்
மாயப் பொருபடைவாணனை  ஆயிரம் தோளும் பொழிகுருதி
பாய சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

8. நெய்யிடை நல்ல சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல
பையுடைநாகப் பகைக்கொடியானுக்குப் பல்லாண்டு பல்லாண்டு கூறுவனே

9. உடுத்துக் களைந்த பீதகவாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக்கருமம் திருத்தித் திருவோணத்திருவிழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு  கூறுதுமே

10. எந்நாள் எம்பெருமான் உந்தனக்கு அடியோமென்றெழுத்துப் பட்ட
அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுய்ந்தது காண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள் சிலைகுனித்து
ஐந்தலைய பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

11. அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே நானுமுனக்குப் பழவடியேன்
நல்வகையால் நமோ நாராயணாயவென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே

12. பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும் வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பியசொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே



ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !

தனியன்கள்

நாலாயிர பொதுத்தனியன்கள்

அழகிய மணவாளன் அருளிச்செய்தது
श्रीशैलेस दयापात्रं धीभक्त्यादि गुणार्णवम् ।
यतीन्द्रप्रवणं वन्दे रम्यजामातरं मुनिम् ॥

கூரத்தாழ்வான் அருளிச்செய்தவை
लक्ष्मीनाथ समारम्भां नाथयामुन मध्यमाम् ।
अस्मदाचार्य पर्यन्तां वन्दे गुरुपरम्पराम् ॥

योनित्य मच्युत पदाम्बुजयुग्मरुज्म व्यामोहतस्तदितराणि तृणाय मेने ।
अस्मद्गुरोर्भगवतोस्य दयैकसिन्धो: रामानुजस्य चरणौ चरणं प्रपद्ये ॥

ஆளவந்தார் அருளிச்செய்தவை
माता पिता युवतयस् तनया विभूतिस्सर्वं यदेवनियमेन मतन्वयानाम् ।
आद्यस्स न: कुलपतेर्वकुलाभिरामं श्रीमद्तधङ्घ्रियुगलं प्रणमामि मूर्ध्ना ॥

भूतंसरस्च महताह्वय भट्टनाथ श्रीभक्तिसार कुलशेकर योगिवाहान् ।
भक्ताङ्घ्रिरेणुं  परकाल यतीन्द्र मिश्रान् श्रीमद्पराङ्कुशमुनिं प्रनतोस्मि नित्यम् ॥

திருவாய்மொழித் தனியன்கள் 

நாதமுனிகள் அருளிச்செய்தது
भक्तामृतं विश्वजनानु मोदनं सर्वार्थतं श्रीशठगोप वाङ्मयम् ।
सहस्रशाखोऽपनिषद्समागमं नमाम्यहं द्राविडवेदसागरम् ॥


ஈச்வரமுனிகள் அருளிச் செய்தது
திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும்
மருவினிய வண்பொருநலென்றும் -அருமறைகள்
தந்தான் அடியினையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து

 

சொட்டைநம்பிகள் அருளிச் செய்தது
மனத்தாலும் வாயாலும் தென்குருகூர் பேணும்
இனத்தாரை அல்லால் இரைஞ்சேன் - தனத்தாலும்
ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன்
பாதங்கள் யாமுடைய பற்று


அநந்தாழ்வான் அருளிச் செய்தது
ஏய்ந்த பெருங்கீர்த்தி இராமானுச முனிதன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் -ஆய்ந்த்பெருஞ்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்
பேராத உள்ளம் பெற


பட்டர் அருளிச் செய்தவை
வான் திகழும்சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமா நுசன்


மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் சடகோபன்
யாழினிசை வேதத் தியல்





 

இரண்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி

இரண்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி

1. கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்
வளரொளி மாயோன் மருவிய கோயில்
வளரிளம் பொழில்சூழ் மாலிரும்சோலை
தளர்விலர் ஆகிச் சார்வது சதிரே

2. சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம்கோயில்
மதிதவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது ஏத்தி எழுவது பயனே

3. பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழைவண்ணர் புரிந்துறை கோயில்
மயல்மிகு பொழில்சூழ் மாலிரும் சோலை
அயன்மலை அடைவது அது கருமமே

4. கருமவன் பாசம் கழித்து உழன்றுய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை அதுவே அடைவது திறமே

5. திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அறமுயல் ஆழிப் படையவன் கோயில்
மறுவில் வண்சுனை சூழ் மாலிரும் சோலை
புறமலை  சாறப் போவது கிறியே

6. கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணை  உண்டவன் கோயில்
மறியொடு பிணைசேர் மாலிரும் சோலை
நெறிபட அதுவே நினைவது நலமே

7. நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுனம் இடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதிசேர் மாலிரும் சோலை
வலமுறை  எய்தி மருவுதல் வலமே

8. வலம் செய்து வைகல் வலங்கழியாதே
வலம் செய்யும் ஆயமாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே

9. வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி அட்டான் அமர்பெரும் கோயில்
மழக்களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவது துணிவது சூதே

10. சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேதமுன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில்சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே

11. பொருளென்று இவ்வுலகம் படைத்தவன் புகழ்மேல்
மருளில் வண்குருகூர் வண் சடகோபன்
தெருள்கொள்ளச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !


இரண்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி

இரண்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி

1.  எம்மாவீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மாபாத பற்புத் தலைசேர்த்தொல்லை
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே

2. ஈதேயான் உன்னைக் கொள்வதெஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணிவண்ண எந்தாய்
எய்தா நின்கழல் யானெய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யேலே

3. செய்யேல் தீவினை என்றருள் செய்யும்என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின்கழல்
எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே

4. எனக்கே ஆட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே

5. சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக அய்தற்க யானும்
பிறப்பில் பல்பிறவிப் பெருமானை
மறப்பொன் றின்றி என்றும் மகிழ்வேனே

6. மகிழ்கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ்கொள் சோதி மலர்ந்த அம்மானே
மகிழ்கொள் சிந்தை சொல் செய்கைகொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை  வணங்க வாராயே

7. வாராய் நின்திருப்பாத மலர்க்கீழ்ப்
பேராதே யான் வந்து அடையும்படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பிலென்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே

8. எக்காலத்தெந்தையாய் என்னுள் மன்னில்
மற்றெக் காலத்திலும் யானொன்றும் வேண்டேன்
மிக்கார்வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே

9. யானே என்னை அறிய கிலாதே
யானே எந்தனதே என்றிருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் வானவர் ஏறே

10. ஏறேல் வென்று ஏர்கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன்பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே

11. விடலில் சக்கரத்து அண்ணலை மேவல்
விடலில் வண்குருகூர்ச் சடகோபன்
கெடலில் ஆயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும்  கிளர்வார்க்கே

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !

இரண்டாம் பத்து எட்டாம் திருவாய்மொழி

இரண்டாம் பத்து எட்டாம் திருவாய்மொழி

1. அணைவது அரவணைமேல் பூம்பாவையாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடுமுதலாம்
புணைவன் பிறவிப் பெருங்கடல் நீந்துவார்க்கே

2. நீந்தும் துயர்ப்பிறவி உட்பட மற்றெவ்வவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண்புனல் பொய்கை யானைஇடர் கடிந்தவன்
பூந்தண்துழாய் என்தனி நாயகன் புணர்ப்பே

3. புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்த்ததன் உந்தியோடு ஆகத்துமன்னி
புணர்த்த திருவாகித் தன்மார்பில் தான்சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே

4. புலனைந்து மேயும் பொறியைந்தும் நீங்கி
நலமந்தம் இல்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே

5. ஒவாத்துயர்ப் பிறவி உட்பட மற்றெவ்வவையும்
மூவாத் தனிமுதலா ய்  மூவுலகும் காவலோன்
மாவாகி ஆமையா ய் மீனாகி மானிடமாம்
தேவாதிதேவ பெருமான் என் தீர்த்தனே

6. தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூந்தாமம்
சேர்த்தியவையே சிவன் முடிமேல் தான்கண்டு
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே

7. கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்ப் புக்கு
இடந்திடும் தன்னும் கரக்கும் உமிழும்
தடம்பெருந்தோள் ஆரத்தழுவும் பாரென்னும்
மடந்தையை மால்செய்கின்ற மால் ஆர்காண்பாரே

8. காண்பாரார் எம்மீசன் கண்ணனை என்காணுமாறு
ஊண்பேசில் எல்லா உலகும்ஓர் துற்றாற்றா
சேண்பால வீடோவுயிரோ மற்றெப் பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளனாம் எங்குமே

9. எங்குமுளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லையால் என்று  இரணியன் தூண்புடைப்ப
அங்கு அப்பொழுதே  அவன் வீயத்தோன்றிய என்
சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே

10. சீர்மைகொள் வீடு சுவர்க்கம் நரகீறா
ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்
வேர்முதலாய் வித்தாய் பரந்து தனிநின்ற
கார்முகில் போல்வண்ணன் என்கண்ணனை நான்கண்டேனே

11. கண்டலங்கள் செய்ய கருமேனி அம்மானை
வண்டலம்பும் சோலை வழுதிவள நாடன்
பண்தலையில் சொன்னதமிழ் ஆயிரத்து ளிப்ப்பத்தும் வல்லார்
விண்தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம்மாவீடே

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !

இரண்டாம் பத்து ஏழாம் திருவாய்மொழி

 இரண்டாம் பத்து ஏழாம் திருவாய்மொழி

1. கேசவன் தமர் கீழ்மேல் எமரேழ் எழுபிறப்பும்
மாசதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா
ஈசனென் கருமாணிக்கம் என்செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே

2. நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வனெந்தை
சீரணங்கமரர் பிறர் பலரும் தொழுதேத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என்மாதவனே

3. மாதவன் என்றதேகொண்டு என்னையினி இப்பால்பட்டது
யாதவங்களும்  சேர்கொடேனென்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரைக் கண்குன்றம்
கோதவமிலென் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே

4. கோவிந்தன் குடக்கூத்தன் கோவலென்றென்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக்கொண்டு என்
பாவந்தன்னையும் பாறக்கைத்து எமரேழ் எழுபிறப்பும்
மேவும் தன்மயமாக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே

5. விட்டிலங்கு செஞ்சோதித் தாமரைப்பாதம் கைகள்கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம்சீர் சங்குசக்கரம் பரிதி
விட்டிலங்கு முடியம்மான் மதுசூதனன் தனக்கே

6. மதுசூதனையன்றி மற்றிலேனென்று எத்தாலும் கருமமின்றி
துதிசூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி ஊழிதொறும்
எதிசூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள்செய்ய
விதிசூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே

7. திரிவிக்கிரமன் செந்தாமரைக்கண் எம்மான் என்செங்கனிவாய்
உருவில்பொலிந்த வெள்ளைப் பளிங்குநிறத்தனன் என்றென்று உள்ளிப்
பரவிப்  பணிந்து பல்லூழியூழி நின்பாத  பங்கயமே
மருவித்தொழும் மனமேதந்தாய் வல்லைகாண் என்வாமனனே

8. வாமனன் என் மரகதவண்ணன் தாமரைக்கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்றென்று உன்கழல்பாடியே பணிந்து
தூமனத்தனனாய்ப் பிறவித் துழதிநீங்க என்னைத்
தீமனம் கெடுத்தாய் உனக்கென்செய்கேன் என்சிரீதரனே

9. சிரீதரன் செய்யதாமரைக் கண்ணன் என்றென்று இராப்பகல்வாய்
வெரீஇ அலமந்து கண்கள் நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து
மரீஇய தீவினைமாள இன்பம்வளர வைகல்வைகல்
இரீஇ உன்னை என்னுள்வைத்தனை என் இருடீகேசனே

10. இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர்குலம்
முருடுதீர்த்த பிரான் அமரர்பெம்மான் என்றென்று
தெருடியாகில் நெஞ்சேவணங்கு திண்ணம் அறியறிந்து
மருடியேலும் விடேல்கண்டாய் நம்பி பற்பநாபனையே

11. பற்பநாபன் உயர்வற உயரும் பெருந்திறலோன்
எற்பரன் என்னையாக்கிகொண்டு எனக்கே தன்னைத்தந்த
கற்பகம் என்னமுதம் கார்முகில்போலும் வேங்கடநல்
வெற்பன் விசும்போர்பிரான் எந்தை தாமோதரனே

12. தாமோதரனைத் தனிமுதல்வனை ஞாலமுண்டவனை
ஆமோதரமறியே ஒருவர்க்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசைமுகற்கும்
ஆமோதரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே

13. வண்ணமாமணிச் சோதியை அமரர்தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென்குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ்மாலை  ஆயிரத்துள் இவைபன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப்பாட்டு அண்ணல்தாள் அணைவிக்குமே

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !

இரண்டாம் பத்து ஆறாம் திருவாய்மொழி

இரண்டாம் பத்து ஆறாம் திருவாய்மொழி

1. வைகுந்தா மணிவண்ணனே என்பொல்லாத் திருக்குறளா என்னுள் மன்னி
வைகும்வைகல்தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து
அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா உன்னைநான் பிடித்தேன் கொள் சிக்கெனவே

2. சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற்பின்
மிக்கஞானச் சுடர்விளக்காய் துளக்கற்று அமுதமாய் எங்கும்
பக்கம் நோக்கறியான் என் பைந்தாமரைக் கண்ணனே

3. தாமரைக்கண்ணனை விண்ணோர்பரவும் தலைமகனை துழாய்விரைப்
பூமருவுகண்ணி எம்பிரானைப் பொன்மலையை
நாமருவி நன்கேத்தி உள்ளிவணங்கி நாம்மகிழ்ந்தாட நாவலர்
பாமருவி நிற்கத்தந்த பான்மையே வள்ளலே

4. வள்ளலே மதுசூதனா என்மரகத மலையே உனைநினைந்து
எள்கல்தந்த எந்தாய் உன்னை எங்கணம் விடுவேன்
வெள்ளமே புரைநின்புகழ் குடைந்தாடிப்பாடி களித்து உகந்துகந்து
உள்ளநோய்கள் எல்லாம் துறந்து உய்ந்து போந்திருந்தே

5. உய்ந்துபோந்து எனது உலப்பிலாத வெந்தீவினைகளை நாசம்செய்து உனது
அந்தமிலடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்துபைந்தலை ஆடரவணைமேவிப் பாற்கடல் யோகனித்திரை
சிந்தைசெய்த எந்தாய் உன்னைச் சிந்தை செய்துசெய்தே

6. உன்னைச் சிந்தைசெய்துசெய்து உன்நெடுமாமொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீவினைகள் முழுவேரறிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல்மார்வம் கீண்ட என்முன்னைக் கோளறியே முடியாததென் எனக்கே

7. முடியாததென்  எனக்கேலினி முழுவேழுலகும் உண்டான் உகந்துவந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார்நோய்களெல்லாம் துறந்து எமர் கீழ்மேலெழுபிறப்பும்
விடியாவெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே

8. மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து அடியைஅடைந்து உள்ளம்தேறி
ஈறிலின்பத் திருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி அசுரர்தம் பல்குழாங்கள் நீறெழ பாய்பறவை ஒன்று
ஏறீவீற்றிருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்

9. எந்தாய் தண்திருவேங்கடம் நின்றாய் இலங்கைசெற்றாய் மராமரம்
பைந்தாளேருருவ ஒரு வாளிகோத்த வில்லா
கொந்தார் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா வானேரே இனியெங்குப் போகின்றதே

10. போகின்ற காலங்கள் போயகாலங்கள் போகுகாலங்கள் தாய்தந்தை உயிர்
ஆகின்றாய் உன்னை நானடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல்புகழ் மூவுலகுக்கும் நாதனேபரமா தண்வேங்கடம்
மேகின்றாய் தண்துழாய் விரைநாறு கண்ணியனே

11. கண்ணித் தண்ணந்துழாய்முடிக் கமலத் தடம்பெருங்கண்ணனை
புகழ்நண்ணித் தென்குருகூர் சடகோபன் மாறன்சொன்ன
எண்ணில் சோர்விலந்தாதி ஆயிரத்துள் இவையுமோர் பத்திசையொடும்
பண்ணில்பாட வல்லாரவர் கேசவன் தமரே



ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !

இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி

இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி

1.அந்தாமத்தன்பு    செய்து    என்னாவி    சேர்    அம்மானுக்கு
அந்தாமவாழ்    முடிசங்கு    ஆழிநூல்    ஆரமுள
செந்தாமரைகண்    செங்கனிவாய்    செங்கமலம்  
செந்தாமரை    அடிக்கள்    செம்பொன்    திரு    உடம்பு

2.திருவுடம்பு    வான்சுடர்    செந்தாமரைக்    கண்    கைகமலம்  
திருவிடமே    மார்வம்    அயனிடமே    கொப்பூழ்
ஒருவிடமும்    எந்தை    திருமார்க்கு    அரனேயோ
ஒருவிமுமின்றி    என்னுள்    கலந்தானுக்கே 

3.
என்னுள்    கலந்தவன்    செங்கனிவாய்    செங்கமலம்
மண்ணும்    சுடர்மலைக்கு    கண்பாதம்    கை    கமலம்
மன்னுமுழுவேழ் உலகமும்    வயிற்றுனுள
தன்னுள்    கலவாதது    எப்பொருளும்    தானிலையே

4.எப்பொருளும்    தானாய்    மரகதக்    குன்றமொக்கும்
அப்பொழுதைத்    தாமரைப்பூக்    கண்பாதம்    கைகமலம்
எப்பொழுதும்    நாள்திங்கள்    ஆண்டு    ஊழிஊழிதொறும்
அப்பொழுதைக்கு    அப்பொழுது    என்    ஆராவமுதமே

5.ஆராவமுதமாய்    அல்லாவியுள்    கலந்த
காரார்கரு    முகில்போல்    என்னம்மான்    கண்ணனுக்கு  
நேராவாய்    செம்பவளம்    கண்பாதம்    கைகமலம்
பேரார நீள்முடி    நாண்    பின்னும்    இழைபலவே

6.பலபலவே    ஆபரணம்    பேரும்    பலபலவே
பலபல    கட்டுண்டு    கேட்டுற்று    மோந்தின்பம்
பலபலவே    சோதி    வடிவு    பண்பு    என்னில்
பலபலவே    ஞானமும்    பாம்பணை  மேலாற்க்கேயோ

7.
பாம்பணைமேல்    பார்கடலுள்    பள்ளி    அமர்ந்ததுவும்
காம்பணைதோள்    பின்னைக்கா    ஏறுடன்    ஏழ்செற்றதுவும்
பூம்பணைய    சோலைமராமரம்    ஏழெய்ததுவும்
பூம்பினைய    தண்துழாய்    பொன்முடியெம்    போரேறே

8.பொன்முடியம்    போரேற்றை    எம்மானை    நாள்தடந்தோள்
தன்னிகரொன்றில்லாத    தண்துழாய்    மாலையனை
என்முடிவு    காணாதே    என்னுள்    கலந்தானை   
சொல்முடிவு  காணேன்நான்  சொல்லுவது  என்சொல்லீரே
 
 
 
 

9.சொல்லீர்    என்னம்மானை    என்னாவி    ஆவிதனை
எல்லையில்    சீர்    என்கருமாணிக்கச்    சுடரை
நல்லவமுதம்    பெறர்கரிய    வீடுமாம்
அல்லிமலர்    விரையொத்து    ஆணல்லன்    பெண்ணல்லனே

10.ஆணல்லன்        பெண்ணல்லன்    அல்லா    அலியுமல்லன்
காணலுமாகான்    உளனல்லன்    இல்லையல்லன்
பேணுங்கால்    பேணுமுருவாகும்    அல்லனுமாம்
கோணைப்    பெரிதுடைத்து    எம்பெம்மானைக்    கூறுதலே

11.கூறுதல்    ஒன்றாராக்    குடக்கூத்த    அம்மானை
கூறுதலே    மேவிக்    குருகூர்ச்    சடகோபன்
கூறினவந்தாதி    ஒராயிரத்துள்    இப்பத்தும்    வல்லார்
கூறுவர்    உள்ளார்    உளரேல்    கூடுவர்      வைகுந்தமே
 


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !
 

இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி

இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி  
1. ஆடியாடி    அகம்   கரைந்து    இசை
பாடிப்    பாடி    கண்ணீர்மல்கி    எங்கும்   
நாடிநாடி    நரசிங்கா    என்று
வாடிவாடும்    இவ்வாணுதலே

 
2. வாணுதல்    இம்மடவரல்    உம்மைக்
காணும்    ஆசையுள்    நைகின்றால்    விறல்
வாணன்    ஆயிரம்    தோள்துணித்தீர்    உம்மைக்
காண    நீர்    இரக்கம்  இலீரே


3. இரக்க    மனத்தோடு    எரியனை
அரக்கும்    மெழுகும்    ஒக்கும்    இவள்
இரக்கமெழீஇர்    இதற்கென்    செய்கேன்
அரக்கன்    இலங்கை    செற்றீருக்கே


4. இலங்கை    செற்றவனே    என்னும்    பின்னும்
வலங்கொள்    புள்ளுயர்த்தாய்    என்னும்
உள்ளம்    மலங்க    வெவ்வுயிர்க்கும்    கண்ணீர்மிகக்  
கலங்கிக்  கைதொழும்    நின்று இவளே


5. இவள்    இராப்பகல்    வாய்வெறீஇ    தன
குவளையொண்    கண்ணநீர்    கொண்டாள்    வண்டு
திவளும்    தண்ணத்துழாய்    கொடீர்    என
தவள    வண்ணர்    தகவுகளே


6. தகவுடையவனே    என்னும்    பின்னும்  
மிகவிரும்பும்    பிரான்    என்னும்    எனது
அகவுயிர்க்கு    அமுதே    என்னும்    உள்ளம்
உகவுருகி    நின்று    உள்ளுளே


7. உள்ளுளாவி    உலர்ந்துலர்ந்து    என
வள்ளலே    கண்ணனே    என்னும்    பின்னும்
வெள்ளநீர்க்    கிடந்தாய்    என்னும்    என
கள்விதான்    பட்ட    வஞ்சனையே


8. வஞ்சனே    என்னும்    கைதொழும்    தனது
நெஞ்சம்    வேவ    நெடிதுயிர்க்கும்    விறல்
கஞ்சனை    வஞ்சனை    செய்தீர்    உம்மைத்
தஞ்சம்    என்று    இவள்    பட்டனவே


9. பட்டபோது    எழுபோது    அறியாள்    விறல்
மட்டலர்    தண்துழாய்    என்னும்    சுடர்
வட்டவாய்    நுதிநேமியீர்    உமது  
இட்டமென்கொள்    இவ்வேழைக்கே


10. ஏழைபேதை    இராப்பகல்    தன
கேழிலொன்    கண்ணநீர்    கொண்டாள்    கிளர்
வாழ்வைவேவ    இலங்கை    செற்றீர்    இவள்
மாழைநோக்கு    ஒன்றும்    வாட்டேன்மினே


11. வாட்டமில்    புகழ்    வாமனனை    இசை
கூட்டிவண்    சடகோபன்சொல்    அமை
பாட்டோர்    ஆயிரத்துள்    இப்பத்தால்    அடி
சூட்டலாகும்    அந்    தாமமே

 
       ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !

இரண்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி

இரண்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி

1. ஊனில்    வாழ்    உயிரே    நல்லைபோ    உன்னைப்பெற்று
வானுளார்    பெருமான்    மதுசூதன்    என்னம்மான்
தானும்    யானுமெல்லாம்    தன்னுள்ளே    கலந்தொழிந்தோம்
தேனும்    பாலும்    நெய்யும்    கன்னலும்    அமுதமொத்தே

 
2.ஒத்தார்    மிக்காரை    இலையாய    மாமாயா
ஒத்தாய்    எப்பொருட்கும்    உயிராய்    என்னைப்பெற்ற    
அத் தாயாய்    தந்தையாய்    அறியாதன்    அறிவித்த  
அத்தா    நீசெய்தன    அடியேன்    அறியேனே


3.அறியாக்        காலத்துள்ளே    அடிமைக்கண்    அன்பு    செய்வித்து
அறியாமாமாயத்து    அடியேனை    வைத்தாயால்
அறியாமைக்    குறளாய்    நிலம்மாவலி    மூவடியென்று
அறியாமை    வஞ்சித்தாய்    எனதாவி    உள்கலந்தே


4.எனதாவி    உள்கலந்த    பெருநல்லுதவிக்    கைம்மாறு
எந்தாவி    தந்தொழிந்தேன்    இனிமீள்வதென்பதுண்டே
எனதாவியாவியும்    நீபொழிள்    ஏழும்    ஏனமொன்றாய்
எனதாவியார்    யானார்   தந்தநீ கொண்டாக்கினையே


5.இனியார்    ஞானங்களால்    எடுக்கல்    எழாத    எந்தாய்
கனியார்    வீட்டின்பமே    என்கடல்    படாவமுதே
தனியேன்    வழ்முதலே    பொழிலேழும்    ஏனமொன்றாய்
நுனியார்    கோட்டில்    வைத்தாய்    உன்பாதம்    சேர்ந்தேனே

6.
சேர்ந்தார்    தீவினைக்கு    அருநஞ்சைத்    திண்மிதியை
தீர்ந்தார்    தம்மனத்துப்    பிறியாதவர்    உயிரை  
சோர்ந்தே    போகல்கொடாச்    சுடரை    அரக்கியை    மூக்கு  
ஈர்ந்தாயை        அடியேன்    அடைந்தேன்    முதல்    முன்னமே

7.
முன்னல்    யாழ்பயில்    நூல்நரம்பின்    முதிர்சுவையே
பன்னலார்    பயிலும்    பரனே    பவித்திரனே
கன்னலே    அமுதே    கார்முகிலே    என்கண்ணா
நின்னலால்    இலேன்    காண்    என்னைநீ    குறிக்கொள்ளே

8.
குறிக்கொள்    ஞானங்களால்    எனையூழி    செய்தவமும்
கிறிக்கொண்டிப்    பிறப்பே    சிலநாளில்    எய்தினன்நான்
உறிக்கொண்ட    வெண்ணெய்பால்    ஒளித்துண்ணும்    அம்மான்பின்  
நெறிக்கொண்ட    நெஞ்சனாய்ப்    பிறவித்    துயர்கடிந்தே

9.
கடிவார்    தண்ணந்துழாய்    கண்ணன்    விண்ணவர்    பெருமான்
படிவான    மிரந்த    பரமன்    பவித்திரன்சீர்
செடியார்    வினைகள்கெட    படிந்து    குடைந்தாடி  
அடியேன்    வாய்மடுத்துப்    பருகிக்    களித்தேனே

10.
களிப்பும்    கவர்வுமற்று    பிறப்புப்    பிணிமூப்பு   இறப்பற்று
ஒளிக்கின்ற    சோதியமாய்    உடன்கூடுவதென்று    கொலோ
துளிக்கின்ற  வானின்    நிலம்    சுடராழி    சங்கேந்தி  
அளிக்கின்ற    மாயப்    பிரான்    அடியார்தம்    குழாங்களையே

11.
குழாங்கொள்    பேரரக்கன்    குலம்    வீய    முனிந்தவனை
குழாங்கொள்    குருகூர்ச்    சடகோபன்    தெரிந்துரைத்த
குழாங்கொள்    ஆயிரத்துள்    இவைபத்தும்    உடன்பாடி
குழாங்களாய்    அடியீருடன்    கூடிநின்று    ஆடுமினே

 
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ! அண்ணன் திருவடிகளே சரணம் !

இரண்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி

இரண்டாம்  பத்து இரண்டாம்  திருவாய்மொழி
 
1.  திண்ணன்    வீடு    முதல்    முழுதுமாய்
எண்ணின்    மீதியன்    எம்பெருமான்
மண்ணும்    விண்ணு    மெல்லாம்    உடனுண்டநம்   
கண்ணன்    கண்ணல்லது    இல்லையோர்    கண்ணே


2.ஏபாவம்    பரமே    ஏழ்    உலகும்
ஈபாவம்    செய்து    அருளால்    அளிப்பாரார்
மாபாவம்
    விட    அரற்க்குப்    பிச்சைபெய்
கோபால
    கோளரி    ஏறன்    அன்றியே

3. ஏறனைப்    பூவனைப்    பூமகள்    தன்னை   
வேறின்றி    விண்தொழத்    தன்னுள்    வைத்து
மேல்தன்னை    மீதிட    நிமிர்ந்து    மண்கொண்ட
மால்தனில்    மிக்குமோர்    தேவும்    உளதே


4. தேவும்    எப்பொருளும்    படைக்கப்  
பூவில்    நான்முகனைப்    படைத்த  
தேவன்    எம்பெருமானுக்கல்லால்  
பூவும்    பூசனையும்    தகுமே


5. தகும்சீர்    தந்தனி    முதனினுள்ளே
மிகும்    தேவும்    எப்பொருளும்    படைக்கத்
தகும்கோலத்    தாமரைக்    கண்ணன்    எம்மான்
மிகும்சோதி    மேலறிவார்    எவரே


6.  எவரும்    யாவரும்    எல்லாப்    பொருளும்
கவர்வின்றித்    தன்னும்    ஒடுங்க    நின்ற
பவர்கொள்    ஞான    வெள்ளச்    சுடர்மூர்த்தி
அவரெம்மாழி    யம்    பள்ளியாரே


7. 
பள்ளியாலிலை    ஏழுலகும்    கொள்ளும்
வள்ளல்    வல்வயிற்றுப்    பெருமான்
உள்ளுளார்    அறிவார்    அவன்    தன்      
கள்ளமாய    மனக்    கருத்தே


8.  கருத்தில்    தேவும்    எல்லாப்    பொருளும்
வருத்தித்த    மாயப்    பிரானையன்றி
ஆரே    தித்திலை    மூவுலகும்    தம்மில்
இருத்திக்    காக்கும்    இயல்வினாரே


9.  காக்கும்    இயல்வினன்    கண்ணபெருமான்
சேர்க்கை    செய்து    தன்னுந்தியுள்ளே
வாய்த்த    திசைமுகன்    இந்திரன்    வானவர்  
ஆக்கினான்    தெய்வ    உலகுகளே


10.  கள்வா    எம்மையும்    ஏழுலகும்    நின்
உள்ளே    தோற்றிய        இறைவா    என்று
வெள்ளேறன்    நான்முகன்    இந்திரன்    வானவர்
புள்ளூர்தி    கழல்    பணிந்து    ஏத்துவரே

 
11.  ஏத்த    ஏழுலகும்    கொண்ட    கோலக்
கூத்தனை    குருகூர்ச்    சடகோபன்  
வாய்த்த    ஆயிரத்துள்    இவை    பத்துடன்  
ஏத்த    வல்லவர்க்கு    இல்லையோர்    ஊனமே


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !

செவ்வாய், 3 மார்ச், 2015

இரண்டாம் பத்து முதல் திருவாய்மொழி

இரண்டாம் பத்து முதல் திருவாய்மொழி

1.வாயும்    திரையுகளும்        கானல்    மடநாராய்
ஆயும்    அமருலகும்    துஞ்சிலும்    நீ    துஞ்சாயால்
நோயும்    பயலைமையும்    மீதூர    எம்மேபோல்
நீயும்    திருமாலால்    நெஞ்சம்    கோட்பட்டாயே 

2.கோட்பட்ட    சிந்தையாய்    கூர்வாய    அன்றிலே
சேட்பட்ட    யாமங்கள்    சேராயிரங்குதியால்
ஆட்பட்ட    எம்மேபோல்    நீயும்    அரவணையான்
தாட்பட்ட    தந்துழாய்    தாமம்    காமுற்றாயே

3.காமுற்ற    கையறவோடு    எல்லேயிராப்பகல்
நீமுற்றக்    கண்துயிலாய்    நெஞ்சுருகி    ஏங்குதியாய்
தீமுற்றத்    தென்னிலங்கை    ஊட்டினான்    தாள்நயந்த   
யாமுற்றது    உற்றாயோ    வாழி    கனைகடலே

4.கடலும்    மலையும்    விசும்பும்    துழாயெம்போல்
சுடர்கொள்    இராப்பகல்    துஞ்சாமல்    தண்வடாய்
அடல்கொள்    படையாழி    அம்மானைக்    காண்பான்நீ
உடலம்    நோயுற்றாயோ    ஊழிதோறூழியே

5.ஊழிதோறூழி    உலகுக்கு    நீர்கொண்டு  
தோழியரும்    யாமும்போல்    நீராய்    நெகிழ்கின்ற
வாழிய    வானமே    நீயும்    மதுசூதன்   
பாழிமையில்    பட்டவன்கண்    பாசத்தால்    நைவாயே

6.நைவாய    எம்மேபோல்    நாண்மதியே    நீயின்னாள்
மைவான்    இருளகற்றாய்    மாழாந்து    தேம்புதியால்
ஐவாய்    அரவணைமேல்    ஆழிப்பெருமானார்
மெய்வாசகம்    கேட்டு    என்மெய்    நீர்மை    தோற்றாயே

7.தோற்றோம்    மடநெஞ்சம்    எம்பெருமான்    நாரணற்கு  
ஆற்றாமை    சொல்லி    அழுவோமை    நீநடுவே
வேற்றோர்    வகையில்    கொடிதாய்    எனையூழி   
மாற்றாண்மை    நிற்றியோ    வாழி    கனையிருளே

8.இருளின்    திணிவண்ணம்    மாநீர்க்    கழியேபோய்
மருளுற்றிராப்பகல்    துஞ்சாயால்    தண்வாடாய்
உருளும்    சகடம்    உதைத்த    பெருமானார்   
அருளின்    பெருநசையால்    ஆழாந்து    நொந்தாயே

9.நொந்தாராக்    காதல்நோய்    மெல்லாவி    உள்ளுலர்த்த
நந்தா  விளக்கமே    நீயும்    அளியத்தாய்
செந்தாமரைக்    கண்    செங்கனிவாய்    எம்பெருமான்
அந்தாமத்    தண்துழாய்    ஆசையால்    வேவாயே

10. வேவாரா    வேட்கைநோய்    மெல்லாவி    உள்ளுலர்த்த
ஓவாதிராப்பகல்    துஞ்சிலும்    நீ    துஞ்சாயால்
மாவாய்    பிளந்து    மருதிடைபோய்    மண்ணளந்த   
மூவாமுதல்வா    இனியெம்மைச்    சோரேலே

11.சோராத    எப்பொருட்கும்    ஆதியாம்    சோதிக்கே
ஆராதகாதல்    குருகூர்ச்    சடகோபன்  
ஓராயிரம்    சொன்ன    அவற்றுள்    இவைபத்தும்
சோரார்    விடார்    கண்டீர்    வைகுந்தம்    திண்ணெனவே

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !