மதுரகவியாழ்வார் அருளிச் செய்த
கண்ணிநுண் சிறுத்தாம்பு
கண்ணிநுண் சிறுத்தாம்பு
தனியன்கள்
நாதமுனிகள் அருளிச் செய்தவை
अविदित विषयान्तर: शठारेरुपनिषदा मुपगानमात्र भोग: ।
अपिचगुणवशात्तदेक शेषी मधुरकविर्हृदये ममाविरस्तु ॥
வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் -ஏறு
எங்கள் வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே அரண்
1.கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என்னப்பனில்
நண்ணித்தென் குருகூர் நம்பி என்னக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என்நாவுக்கே
2. நாவினால் நவிற்று இனபமெய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடிமெய்ம்மையே
தேவு மற்றறியேன் குருகூர்நம்பி
பாவின் இன்னிசை பாடித்திரிவனே
3. திரிதந்தாகிலும் தேவபிரானுடை
கரியகோலத் திருவுருக் காண்பன்நான்
பெரிய வண்குருகூர் நகர்நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே
4. நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவார் ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே
5. நம்பினேன் பிரர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்
செம்பொன்மாடத் திருக்குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே
6. இன்றுதொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்றுதன் புகழ் ஏத்தவருளினான்
குன்றமாடத் திருக்குருகூர் நம்பி
என்றுமென்னை இகழ்விலன் காண்மினே
7. கண்டுகொண்டென்னைக் காரிமாறப் பிரான்
பண்டைவல்வினை மாற்றி அருளினான்
எண்திசையும் அறிய வியம்புகேன்
ஒண்தமிழ்ச் சடகோபன் அருளையே
8. அருள்கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள்கொண்டாயிரம் இந்தமிழ் பாடினான்
அருள்கொண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
9. மிக்கவேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என்னெஞ்சுள் நிறுத்தினான்
தக்கசீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆள்
புக்ககாதல் அடிமைப் பயனன்றே
10. பயனன்றாகிலும் பாங்கல்ல ராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்
குயில் நின்றார் பொழில்சூழ் குருகூர்நம்பி
முயல்கின்றேன் உந்தன் மொய்கழற்கன்பையே
11.அன்பந்தன்னை அடைந்தவர்கெல்லாம்
அன்பன் தென்குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவிகள் சொன்னசொல்
நம்புவார் பதி வைகுந்தங் காண்மினே
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !